பிரியமானவர்களே!
இக்கதை எனது கன்னிமுயற்சி. இக்கதையை
வாசித்து நீங்கள் தரும் விமர்சனத்தைப்
பொறுத்தே என் சிந்தையில் வட்டமிட்டுக்
கொண்டிருக்கின்ற மற்றுமோர் காதல் கதைக்கு என்னால்
பாதையமைக்க முடியும்.
பரீட்சை
செய்துவிட்டு பெறுபேறுக்காக் காத்துக் கொண்டிருக்கின்ற மாணவனைப்போல உங்களுடைய ஆரோக்கியமான விமர்சனத்துக்காகக் காத்திருக்கிறேன்.
மேலும்
இதைக் தொடர்கதையாக வெளியிட்ட 'கனடா உதயன்' பத்திரிகை
ஆசிரியர் ஆர்.லோகேந்திரலிங்கத்துக்கும், இந்த நூலை
அழகொளிர அச்சிட்ட நர்மதா பதிப்பகத்தாருக்கும்
மற்றும் திரு.பாலகுமாரன், திரு.மு.மேத்தா, திரு/திருமதி
அருண்மொழி, பூங்கோதை, திரு.பார்த்திபன் ஆகிய
நண்பர்களுக்கும் நன்றி!.
பிரியமுடன்,அகில் (2002)
FIRST EDITION: 2002
SECOND EDITION: 2004
FIRST EDITION: 2002
SECOND EDITION: 2004
No comments:
Post a Comment